• Mundram ulaga por

    தமிழாற்றுப்படை

    3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்.

    • Mundram ulaga por

    வைரமுத்து சிறுகதைகள்

    இரண்டு நூற்றாண்டுகளின் வாழ்வியல் – உளவியல் – உலகியலைப் பாத்திரங்களின் வழியே பதிவு செய்யும் உலகத்தரம் வாய்ந்த 40 சிறுகதைகள்.

    • Mundram ulaga por

    மூன்றாம் உலகப் போர்

    புவிவெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரு பெரிய வினாக்களுக்கிடையே ஓர் இந்திய உழவனின் வாழ்வியல். உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட உலக நாவல். மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையின் சிறந்த ‘உலகத் தமிழ் நாவல்’ பரிசுபெற்றது (10ஆயிரம் அமெரிக்க டாலர்)

    • Mundram ulaga por

    ஆயிரம் பாடல்கள்

    கவிஞர் எழுதிய 7000 திரைப்பாடல்களிலிருந்து கவிஞரே தேர்ந்தெடுத்த 1000 பாடல்களில் தொகுப்பு. 1000 பாடல்களுக்கும் பாடல் பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

    • Karuvachi Kaviyum OK

    பாற்கடல்

    இலக்கியம் – சமூகம் – வாழ்வியல் – கலை – அரசியல் குறித்த வாசகர்களின் அரிய கேள்விகளுக்கு விளைந்த ஆழ்ந்த விடைகள்.

    • Karuvachi Kaviyum OK

    கருவாச்சி காவியம்

    மண்ணியல் வழியே பெண்ணியலைப் பதிவு செய்த ஒரு பெரும்படைப்பு. பல நூற்றாண்டுகளாய் வாழப்பட்டு வந்த கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையை உதிரத்தில் வரைந்த உயிர்ச்சித்திரம்.

    • Oru gramathu Paravaikalum OK

    ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

    ஐரோப்பா - ஆசியாவின் வரலாறு பண்பாடுகளைப் பதிவு செய்யும் கவிஞரின் புகழ்மிக்க பயண நூல்.

    • Koncham Theneer

    கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

    தனது நடையிலிருந்து விடுபட்டு நவீன மொழியில் கவிஞர் படைத்த மாறுபட்ட புதுக்கவிதைகள்.

    • KalliKattu Ithikasam

    கள்ளிக்காட்டு இதிகாசம்

    வைகை அணை கட்டப்பட்டபோது சுதந்திர இந்தியாவில் அகதிகளாய் வெளியேற்றப்பட்ட கிரமத்து மக்களின் வாழ்வும் வரலாறும் சொல்லும் நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்றது. 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது.

    • Vairamuthu Kavithagal

    வைரமுத்து கவிதைகள்

    1972 முதல் 28 ஆண்டுகள் கவிஞர் படைத்த கவிதைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகளின் பெருந்தொகுப்பு இது. 2000 ஆண்டு வெளிவந்தது. அறிஞர் பெருமக்கள் ஆகியோர் ஒரு குழுவாக அமர்ந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அநாள் முதல்வர் கலைஞர் நூலை வெளியிட்டார். கலைஞானி கமல்ஹாசன் முதற்படி பெற்றுக்கொண்டார்.

    • Vairamuthu Kavithagal

    பெய்யெனப் பெய்யும் மழை

    வெறிகொண்ட தமிழால் எழுதப்பட்ட நெறிகொண்ட புதுக்கவிதைகள். இந்த நூலில் வெளியீட்டு விழாவில்தான் ‘கவிப்பேரரசு’ பட்டத்தைக் கவிஞருக்கு கலைஞர் வழங்கினார்.

    • Tamillukku Neeram Undu

    தமிழுக்கு நிறம் உண்டு

    காலத்தைப் புதுப்பித்துக்கொடுக்கும் புதுக்கவிதைகள். கவிதைகளைப் போலவே முன்னுரையும் பெரிதும் பேசப்படுவது.

    • villodu va nilavea-wrapper

    வில்லோடு வா நிலவே

    ஈராயிரமாண்டுகட்கு முற்பட்ட தமிழர்களின் வரலாறு பண்பாட்டைத் தீட்டிக்காட்டும் கவிஞரின் ஒரே வரலாற்று நாவல்.

    • Idhanal sahalamana-wrapper OK

    இதனால் சகலமானவர்களுக்கும்

    சமூகத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆழ்ந்த இலக்கிய வாழ்வியல் கட்டுரைகள்.

    • Segrankalai Nokke

    சிகரங்களை நோக்கி

    கவிதை கொழிக்கும் உரைநடையில் எழுதப்பட்ட கவிஞரின் முதல் அறிவியல் நாவல்

    • PORKALAM-WRAPPER

    ஓர் போர்க்களமும் இரண்டு பூக்களும்

    சமஸ்தானங்களின் பின்னணியில் எழுதப்பட்ட துடிப்புமிக்க காதல் கதை.

    • INTHA KULATHIL KAL-Wrapper OK

    இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

    கவிப்பேரரசின் வாழ்வியலைப் பாதித்த ஆழமான ஆளுமைகளின் அழுத்தமான நடைச்சித்திரம்.

    • Kavi Nerathil oru Kathal

    காவிநிறத்தில் ஒரு காதல்

    கவிப்பேரரசின் வாழ்வியலைப் பாதித்த ஆழமான ஆளுமைகளின் அழுத்தமான நடைச்சித்திரம்.

    • Indha Pookkal- Wrapper OK

    இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

    தமிழ்க் கவிதை வெளியைப் புரட்டிப்போட்ட புதுக்கவிதைத் தொகுதி. மரங்களைப் பாடுவேன் என்ற புகழ்மிக்க கவிதையும் இதற்குள்தான்.

    • Vadukapatti mudhal Valga varai copy

    வடுகபட்டி முதல் வால்கா வரை

    கோர்ப்பசேவ் காலத்தில் ரஷ்யாவுக்குச் சென்று வந்த கவிஞரின் முதல் பயண நூல்.

    • Ella Nathiyellum en odam wrapper

    எல்லா நதியிலும் என் ஓடம்

    இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் வெளிவந்த புகழ்மிக்க கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்.

    • Meendum En Thottilukku final OK

    மீண்டும் என் தொட்டிலுக்கு

    ஓர் அழகான நாவலும் ஒரு குறுநாவலும்.

    • Nettru Potta Kolam final OK

    நேற்றுப் போட்ட கோலம்

    பாடல்கள் பிறந்த சுவையான நிகழ்வுகள் - சுகமான தமிழில்.

    • Chirpiyea Vunnai Wrapper

    சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

    இளைய தலைமுறையின்மீது பெருந்தாக்கம் ஏற்ப்படுத்திய தன்முனைப்புக் கட்டுரைத் தொகுப்பு. பல கல்லூரிகளில் பாடமாய்த் திகழ்வது.

    • Ratha thanam

    ரத்ததானம்

    புத்தம் புதிய உள்ளடக்கங்களில் மரபுக் கவிதைகள்.

    • Kelvikalal oru velvi

    கேள்விகளால் ஒரு வேள்வி

    கலை – பாடல்கள் – சமூகம் குறித்து இளைஞர்களின் வினாக்களுக்குக் கவிஞரின் விடைகள்.

    • Kodimarathin Veargal

    கொடிமரத்தின் வேர்கள்

    சமகால சமூகம் குறித்த போர்க்குணம் மிக்க புதுக்கவிதைகள்.

    • Kalvettukkal

    கல்வெட்டுக்கள்

    தமிழ் இலக்கியவெளி குறித்து கவிஞரின் ஆழ்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்

    • Moznathin Satham

    மெளனத்தின் சப்தங்கள்

    தமிழ்த் திரைப்படங்கள் குறித்து சமூகப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட கலைக் கட்டுரைகள்.

    • En Jannalin Vazliya

    என் ஜன்னலின் வழியே

    கலை ஆளுமைகள் மற்றும் பாடல்கள் குறித்த கட்டுரைகள்.

    • VANAM THOTTUVIDUM THOORAM

    வானம் தொட்டுவிடும் தூரம்தான்

    மண்ணியல் சார்ந்த கவிஞரின் முதல் நாவல். நட்பு என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது.

    • EN PAZHAIYA PANAI OOLAI

    என் பழைய பனை ஓலைகள்

    கல்லூரி நாட்களில் படைத்த எழுச்சியான மரபுக் கவிதைகளின் தொகுப்பு. பல கவிதைகள் பரிசு பெற்றவை.

    • Iduvarai Nann

    இதுவரை நான்

    30 வயதில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை. கவிப்பேரரசின் இலக்கியம் வாழ்வு இரண்டுக்குமான அடிப்படை வரலாறு.

    • Kavirajan Kathai

    கவிராஜன் கதை

    பாரதியாரின் வரலாறு புதுக்கவிதையில். பாரதியார் நூற்றாண்டில் மகாகவிக்குக் கவிப்பேரரசின் காணிக்கை.

    • Thirutthi Ezhuthiye Thiruppugal

    திருத்தி எழுதிய தீர்ப்புகள்

    கவிஞரின் முதல் புதுக்கவிதைத் தொகுதி. கவிஞரின் திரை நுழைவுக்கு கட்டியங்கூறிய கவிதைகள். அறச்சீற்றமும் சமூக அக்கறையும் கொண்ட ஆவேசக் கவிதைகள்.

    • Vaikarai Megangal

    வைகறை மேகங்கள்

    19 வயதில் வெளிவந்த கவிஞரின் முதல் கவிதைத் தொகுதி. காதல் – இலட்சியம் – தத்துவம் – வாழ்வியல் கொழிக்கும் மபுக் கவிதைகள். கவியரசர் கண்ணதாசனின் அணிந்துரை கொண்டது.